காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்
Kaatukullae keisalimaram
காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்
போன்றவரே ஆராதனை
என் மேலே விழுந்த கொடி
நேசமே ஆராதனை
பிரியமே ஆராதனை
நேசரே ஆராதனை
என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்
என் நேசரின் கரங்கள் என்னை
அணைத்துக்கொள்ளும்
அவர் இன்பமானவர் என் உள்ளத்தில்
வந்தவர்
அவர் ஜீவனுள்ளவர் என் உயிரில் கலந்தவர்
என் நேசரின் வஸ்திரம் வாசனை வீசும்
என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்
அவர் என்னை பார்த்தால்
நான் பிரகாசிப்பேன் அவர் தொட்டால் நான்
சுகமாவேன்
என் நேசரின் பாதங்கள் அழகுள்ளது
என் நேசரின் நடையோ
என்னை கவர்ந்தது
அவர் என்னுடையவர் என் நேசர்
வெண்மையும் சிவப்புமானவர்