• waytochurch.com logo
Song # 15095

kolkathaa meattinilea koduura கொல்கொதா மேட்டினிலே


கொல்கொதா மேட்டினிலே

கொடூர பாவி எந்தனுக்காய்

குற்றமில்லாத தேவ குமாரன்

குருதி வடிந்தே தொங்கினார்



பாவ சாபங்கள் சுமந்தாரே

பாவியை மீட்க பாடுபட்டார்

பாவமில்லாத தேவகுமாரன்

பாதகன் எனக்காய் தொங்கினார்



மடிந்திடும் மன்னுயிர்க்காய்

மகிமை யாவும் இழந்தோராய்

மாசில்லாத தேவகுமாரன்

மூன்றாணி மீதினில் தொங்கினார்



இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட

இரட்சிப்பின் நதி என்னில் பாய

ஆதரவில்லா தேவகுமாரன்

அகோரக் காட்சியாய் தொங்கினார்



கல்வாரி காட்சி இதோ

கண்டிடுவாயே கண்கலங்க

கடின மனமும் உருகிடுமே

கர்த்தரின் மாறாத அன்பி னிலே



உள்ளமே நீ திறவாயோ

உருகும் சத்தம் நீ கேளாயோ

உன் கரம் பற்றி உன்னை நடத்த

உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com