• waytochurch.com logo
Song # 15099

கண் கலங்காமல் காத்தீரய்யா

Kan Kalangamal


கண் கலங்காமல் காத்தீரய்யா
கால் இடறாமல் பிடித்தீரய்யா
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
எடுத்துக் கொண்டீரய்யா
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது
மகிமையின் கிரீடம் என் தலைமேல்

நோவா நடந்ததால் உம் கண்களில்
கிருபை கிடைத்ததையா
குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா

ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சிநேகிதன் என்றழைத்தீர்
செய்யப்போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை

உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டீரையா
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com