• waytochurch.com logo
Song # 15110

கண்டீர்களோ சீலுவையில்

Kandirkalo Siluvaiyil


கண்டீர்களோ சீலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை

மன்னியும் என்ற வேண்டலை
கேட்டீர்களே ஐயோ
ஏன் கைவிட்டீர் என்றார்
அதை மறக்கக்கூடுமோ

கண்மூடி தலை சாயவே
முடிந்தது என்றார்
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்

அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
ஈடேற்றம் வந்ததே
ஆ பாவீ இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே

சீர்கெட்டு மாண்டு போகையில்
பார்த்தேன் என் மீட்பரை
கண்டேன் கண்டேன் சிலுவையில்
மரிக்கும் இயேசுவை


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com