கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
Karam Pidith Unnai
கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை என்றும் காத்திடுவார்
கலங்கிடாதே திகைத்திடாதே - கர்த்தர்
கரம் உனக்குண்டு பயந்திடாதே
படு குழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே
ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள்
என்றும் உன்மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே