கர்த்தாவே நீரே எந்தன் தேவனல்லோ
Karthave Neerae Enthan
கர்த்தாவே நீரே எந்தன் தேவனல்லோ
எத்தனை அதிசயம் செய்தீர் என் வாழ்வில்
உந்தனை உயர்த்தி உம் நாமத்தை துதிப்பேன்
என் வாழ்வெல்லாம் உம் கரம் பற்றுவேன்
பெருவெள்ளம் போல சத்துரு வந்தாலும்
தருவீர் இவ்வேழைக்கு பெலன் திடனும்
எந்தன் கோட்டையும் அடைக்கலம் நீரே
உந்தன் தாசர்க்கு நிழலும் நீரே
என் தொனி கேட்டு எனக்கிரங்குமே
என் தேவா கிருபை எனக்குத் தாருமே
பகைவர் முன் என்னை உயர்த்திடுவீரே
நகைப்போர் அனைவரும் நாணுவாரே