• waytochurch.com logo
Song # 15174

காலையும் மாலை எவ்வேளையும்

Kaalaiyum Maalaiyum


காலையும் மாலை எவ்வேளையும்
கர்த்தரை கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
என தூதர் பாடிடும் தொனி கேட்குதே

கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி
திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன்

எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என் மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய்
செவ்வையான பாதையில் நடத்திடுவார்

ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில்
தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன்

தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடி சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னை
பாதுகாத்து உயர்த்துவார் கன்மலை மேல்

எந்தன் முகத்தை தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும்
என் சத்தம் கேட்டு தயவாய் பதிலளிப்பார்

தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாக திடமாக
கர்த்தருக்கே என்றென்றும் காத்திருக்கும்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com