மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்
Makizchiyodu Thuthikiroam
மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்
மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவனே இயேசு ராஜா
மனதில் பூத்து மணம் வீசும் ரோஜா
இயேசு ராஜா சாரோன் ரோஜா
நாற்றமாக இருந்த என்னை வாசமாக மாற்றினீரே
பாவியாக இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்றினீரே
நல்லவரே வல்லவரே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே
நெருக்கத்திலே இருந்த என்னை விசாலத்தில் வைத்தீரே
சேற்றிலிருந்து தூக்கி எடுத்து கன்மலைமேல் நிறுத்தினீரே
அற்புதரே அதிசயமே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே
அடுப்புக்கரி போலிருந்தேன்
பொன் சிறகாய் மாற்றினீரே
திரு இரத்தத்தாலே கழுவி
என்னை சுத்தமாக ஆக்கினீரே
உன்னதரே உயர்ந்தவரே இருள்
நீக்கும் நல்ல ஒளிவிளக்கே-உள்ளத்தின்
தாயைப்போல என்னை அவர்
சோர்த்தணைத்துக் கொண்டாரே
நல்ல தந்தை போல என்னை அவர்
தோளில் தூக்கிச் சுமந்தாரே
அப்பாவல்லோ அப்பாவல்லோ
பிள்ளையல்லோ செல்லப் பிள்ளையல்லோ