மனமே நீ வருத்தம் கொள்ளாதே
Maname Nee Varutham
மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
நம் இயேசுவின் அன்பு உண்டு அது
உனக்கு என்றும் உண்டு
நினைத்த காரியம் வாய்த்திடாமல்
வாடிப்போனாயோ
பாரங்கள் மலைபோல் குவிந்ததாலே
பயந்து போனாயோ
நம் இயேசுவின் கரங்களே அதனை
இனி செய்து முடித்திடுமே -2
நோய்களினாலே பெலனிழந்து மனம்
நொடிந்து போனாயோ
மரணந்தான் இனி முடிவென்று சொல்லி
மௌனம் ஆனாயோ
நம் இயேசுவின் தழும்புகளால்
சுகமடையே நோய்களில்லை 2
சோதனை மேலே சோதனை வந்து
சோர்ந்து போனாயோ
விடுதலை பெறவே வழி தெரியாமல்
துவண்டு போனாயோ
நம் இரட்சகர் இயேசுவினாலே
விடுதலை உனக்கென்றுமுண்டு -2