• waytochurch.com logo
Song # 15234

meetpar yesu kurisil மீட்பர் இயேசு குருசில்


மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே

லோகப் பாவம் தீர்க்க பலியான
தேவ ஆட்டுக் குட்டியானவர்
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் -எம்மில்

இயேசுவே கல்வாரி சிலுவையில்
ஏறி ஜீவன் தந்திராவிடில் - ஏழையான்
என் பாவ பாரங்களை எங்கு
சென்று தீர்த்துக் கொள்ளுவேன் - பூவில்

தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ
என்று இயேசு கதறினாரே
பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையோ - அவர்

அன்னை தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
ஆச்சரிய தேவ அன்பைப் பாட - ஆயிரம்
நாவுகள் போதுமோ - பதினாயிரம்

பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
தேடி நாடி ஓடி வந்தால் உன்னைத் தேற்றி
ஆற்றித் தாங்குவார் அவர் - இப்போ

கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல் மனமும் உருகிடுமே
மாய லோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே - என்றும்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com