• waytochurch.com logo
Song # 15304

neer sonnal pothum நீர் சொன்னால் போதும் செய்வேன்


நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே

ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே

கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால்
எனக்கில்லை கவலை காற்றையும்
கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால்
எனக்கேது கவலை

பதையெல்லாம் அந்தகாரம்
சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசருண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து
சூழ்ந்து கொண்டாலும் பாதுகாக்க
கர்த்தர் உண்டு பயமே இல்லையே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com