• waytochurch.com logo
Song # 15305

neer indri vazhvethu நீரின்றி வாழ்வேது இறைவா


நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறு ஆண்டு நான் வாழ்ந்தபோதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்

பலகோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே

கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளம் ஜீவனைத் தந்தவர் நீர்
உம்மையான்றி அணுவேதும் அசையாதய்யா
உம் துணையின்றி உயிர்வாழ் முடியாதய்யா

எத்தனை நன்மைகள் செய்தீர் ஐயா
அதில் எதற்கென்று
நன்றி சொல்லித் துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதைய்யா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com