நன்றி செலுத்துவாயே என்
Nandri Seluthuvaye En
நன்றி செலுத்துவாயே என் மனமே நீ
நன்றி செலுத்துவாயா
அன்றதம் செய்தபாவம் பொன்றுநிமித்தமாக
இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே
தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே
அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தார்
துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே
வல்லமையுள்ளதேவன் வானநித்தியபிதா
சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே
உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன்
இந்நிலம் சமாதானம் என்று முண்டாக
ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
ஆசீர்வதிப்பதாலே அருமையாக