• waytochurch.com logo
Song # 15378

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்

Neer Seitha Nanmaikal


நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன்

என் தாயின் கருவிலே நான் உருவான
நாள்முதல் நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன்

பாவியாக நான் வாழ்ந்து
பாவம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று
துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே

நான் திக்கற்று துணையின்றி
திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடி வந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து
மடிகின்ற நேரத்தில் - உம்
மகன் என்னை தேடி வந்தீரே

நான் மனதார நேசித்த
மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீர் ஐயா
என் சூழ்நிலைகள் மாறிட்டாலும்
மாறிட உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com