ஒன்று கூடி ஆராதிப்போம்
Ondru Koodi Aarathipom
ஒன்று கூடி ஆராதிப்போம்
இயேசு நமது பெலனானார்
ஒன்று கூடி ஆராதிப்போம்
இயேசு நமது அரணானார்
அல்லேலூயா அல்லேலூயா
பரிசுத்த தேவனை ஆராதிப்போம்
பரலோக ராஜனை ஆராதிப்போம்
திரு இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்து
ஜீவன் தந்தவரை ஆராதிப்போம்
முழு உள்ளத்தோடு ஆராதிப்போம்
முழு பெலத்தோடு ஆராதிப்போம்
ஆவியில் நிறைந்து ஆண்டவரை துதித்து
ஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம்
கண்ணீரை துடைத்தவரை ஆராதிப்போம்
கவலைகள் நீக்கினாரே ஆராதிப்போம்
கண்மனி போல காலமெல்லாம் காக்கும்
கர்த்தாதி கர்த்தரை ஆராதிப்போம்