• waytochurch.com logo
Song # 15452

paavi ennidam vara பாவி என்னிடம் வர


பாவி என்னிடம் வர
மனதில்லையா ஓ

பாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே நீ
சீவன் தனைப்பெறவே

இருளுக்குட் சிக்கி அருளற்றுப் போனாய்த்
தெருளளி தனைப் பெறவே

என் சமாதானம் உன் சுகமாகும்
நெஞ்சைப் பூராய்த் திறந்து

அசுத்தங்கள் நீங்கிப் பசிதாகமில்லையோ
பரிசுத்தஞ் செய்வேனே

மண்ணிலே நேசம் வைப்பாயோ மோசம்
விண்ணிலிடங் கிடையா

எனதிடம் அருகும் எவரையுந் தள்ளேன்
க்ஷணத்தில் விரைந்திடுவாய்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com