• waytochurch.com logo
Song # 15453

paavam pokkum jeevanathiyai பாவம் போக்கும் ஜீவநதியைப்


பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாரீர் வந்து பாரீர் - பாரில்

தீவினை தீர்க்கும் தேவமறியின்
திருரத்த மிந்த ஆறாம் - பாரில்

கல்வாரி மலைச்சிகர மீதூற்றுக்
கண்கள் ஐந்து திறந்தே - அதோ
மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
வழிந்தோடுது பாரீர் - பாரில்

பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
பதறி விழுந் தலறி - நிதம்
கூவியழுத அனந்தம் பேரிதில்
குளித்தே யுளங் களித்தார் - பாரில்

பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து - அதை
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது பாரீர் - பாரில்

ஒருதர இந்த ந்தியின் தீர்த்தம்
உண்டோ ஜீவன் கண்டோர் - தாகம்
அறுதி யடைவர் வேறொருதிநதிக்
கலையார் தேடி யலையார் - பாரில்

நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
நீரார் நிதியிதிலே - தங்கள்
வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
வாழ்ந்துகீதம் பாட - பாரில்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com