படைத்தவர் உன்னை கைவிடமாட்டார்
Padaithavar Unnai Kaividamattar
படைத்தவர் உன்னை கைவிடமாட்டார்
பதறாதே மனமே
அழைத்தவர் உன்னை நடத்திடுவாரே
அனுதின வாழ்க்கையிலே
நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நாம் போற்றிடும் இயேசு பெரியவர்
பெயர் சொல்லி அழைத்த உன்னத தேவன்
ஒருபோதும் உன்னை மறவார்
காரிருளில் நீ நடந்திடும் வேளை
ஒளியாய் வந்திடுவார்
கடந்ததை நினைத்து அழுதிட வேண்டாம்
கலங்கிடவும் வேண்டாம்
தீமைகள் யாவும் நன்மையாய் மாறும்
நம் இயேசு ஜீவிப்பதால்
வறண்ட நிலங்கள் வயல்வெளியாகும்
பள்ளங்கள் நிரப்பப்படும்
தேவனால் கூடும் எல்லமே கூடும்
கூடாத்தொன்றுமில்லையே
அகிலம் ஆளும் ராஜாதி ராஜா
நம் துணையானாரே
யெகோவாயீரே போதும் அவரே
என்றும் நம் வாழ்வினிலே