பாவி நான் என்ன செய்வேன்
Paavi Naan Enna Seiven
பாவி நான் என்ன செய்வேன் கோவே
ஜீவன் நீர் விட்டதற்காய்
தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்
தாவி உயிர்விட்டு ஜீவித்த தென்கொலோ
நாடி எனைத் தயவாய் மணஞ்செய்ய தேடிவந்தீர் அரசே
ஆடுகளுக்காக நீடி உயிர் தர
பாடு பட்டுக் குரு சூடிறந்தீர் அன்றோ
பொன்னுல காதிபனே தேவீர் என்ன செய்தீர் ஐயனே
சின்னப் படுத்தவும் கன்னத்தடிக்கவும்
சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்
வாரால் அடிக்கப்பட்டு குட்டுண்டு வாதைபட்டெண்ணம் அற்றீர்
சீரா மனுடவதாரா சருவாதி
காரா பரம குமாரா ஓலோலமே
வாதை உமக்கெதினால் உண்டாயிற்று பாதகிபாவத்தினால்
வேதம் நிறைவுற ஆதி பவம் அற
நீதி தரும் யேசு நாத சுவாமியே
குற்றமற்ற மீட்பர் பவக்கடன் முற்றும் அறத்தீர்ப்பார்
கொற்ற வர்க்கும் கல்வி கற்றவர்க்கும் சுரர்
மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter