• waytochurch.com logo
Song # 15629

சிந்தை செய்யும் எனில்

Sinthai Seiyyum Enil


சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச்
சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர்

தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும்
விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியேநீர்

பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின் நேய
சீலனாம் கிறிஸ்தியேசுக்கும்
சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் அத்தாலே தேவ
கோலம் என்றன் பங்கதாயிற்று
தந்தைதாயார் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க
வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர்

திரியேகதேவனே என்றே அவரைவிட்டுப்
பிரியேன் என் பிராணன் போனாலும்
அரிய அவரின்தயையே எனக்கு என்றும்
உரிய ஒன்றான பொருளே
பொய் லோகம் மாம்சம் என்னைப் பிடித்திழுத்தாலும்
ஓய் பரிசுத்த ஆவி உதவுவீர் எனகென்றும்

பக்தியுள்ள ஜீவியம் செய்து பகலின் சேயாய்
எத்திசையினும் விளங்கிடச்
சுத்தமனம் செய்கையைத்தாரும் எனைநான் என்றும்
தத்தம் செய்யக் கற்பித்தருளும்
உன்னதத்தில் வாழ் தந்தைக்கும் உயர்சுதன் ஆவியர்க்கும்
என்னகத்தினின்றும் துதிஏறுவதாக ஆமேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com