• waytochurch.com logo
Song # 15641

தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்

Thanimaiyil ummai aaraadhikkindren


தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே
யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே

அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே
இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்
சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே
சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே

நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே
நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே
சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே
சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே

நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்
நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்
ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்
ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்
உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்
உயிர் உள்ளவரையில் ஆராதிக்கின்றேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com