உம் வழிகளை அறிந்தவன் யார்
Um vazhigalai arindhavan yaar
உம் வழிகளை அறிந்தவன் யார்
உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்
வானங்கள் உயர்ந்தது போல்
உம் வழிகளும் உயர்ந்ததுவே
நல்லோசனைகள் ஆலோசனைகள்
சொல்வதில் பெரியவரே
மானிட வழிகளெல்லாம்
உம் வழிகள் இல்லை என்றீர்
என் யோசனைகள் உம் யோசனைகள்
எந்நாளும் வெவ்வேறென்றீர்
உந்தன் நல் வழிகள் எல்லாம்
ஆராய்ந்து முடியாதைய்யா
உந்தன் செயல்கள் மேலானவைகள்
எண்ணிட முடியாதைய்யா