உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
Ummaithaan ummai mattum
உம்மைத்தான் உம்மை மட்டும் தான் 
என் கண்கள் தேடுதே 
என் உள்ளம் நாடுதே
மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் - அதுபோல் 
என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் - தேவா
உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன் 
வேதம் சொல் சித்தம் செய்கிறேன் - உந்தன் 
பாதம் நல் முத்தம் செய்கிறேன் - தேவா
உம்மைபோல் என்ன காக்க மேலோகில் என்னை சேர்க்க
பூலோகில் யாருமில்லையே 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter