உலகை இரட்சிப்பவரே
Ulagai ratchippavare
உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே
உயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே
காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே
பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே
வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும்
உமக்கு கடினமில்லை
மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர்
உமக்கு நிகருமில்லையே
உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே
அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே
எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர்
இரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர்
கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக மாற்றியது
அன்பினை அறிவிக்கத்தான்
அன்றாடம் வெற்றிபெற பரிசுத்த ஆவி உண்டு
பேரன்பை நிரூபிக்கத்தானே
உமது மகிமைக்குத்தானே எங்களை படைத்துவிட்டீர்
எங்களை மகிமையில் சேர்க்க அன்புடன் அழைத்துவிட்டீர்