உந்தன் சமூகம் எனக்கானந்தமே
Unthan Samugam Enakkananthame
உந்தன் சமூகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
உம்மையன்றி யாருமில்லை
கண்ணீரின் வாழ்க்கையே
என் வாழ்க்கை ஆனது
எந்தன் கண்ணீரை துடைப்பது
நீரன்றி யாருண்டு
என் தனிமை நேரங்களில்
துணையாய் வந்தீரே
எந்தன் வேதனை நேரத்தில்
உம் வார்த்தையால் தேற்றினீர்
என் வாழ்க்கையில் யாருமில்லா
அனாதை ஆனேனே
நான் உண்டு உன் துணையே
என்றீரே என் இயேசுவே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter