உந்தன் உள்ளங்கையிலே
Unthan Ullangaiyile
உந்தன் உள்ளங்கையிலே
என்னை வரைந்து வைத்துள்ளீர்
உம்மாலே நான் மறக்கபடுவதில்லை
ஆணிகளால் கடாவப்பட்டவாரால்
நான் என்றும் மறக்கபடுவதில்லை
என் பாவங்களைதம் தோலில் சுமந்த
என் இயேசுவால்
மறக்கபடுவதில்லை
என் மீறுதல்களுகாய் முள்முடி சுமந்த
என் இயேசுவால்
மறக்கபடுவதில்லை
என் பாவங்கள்காய்
பரிந்து பேசுகிற என்
இயேசுவால் மறக்கபடுவதில்லை
என் கண்ணீர் துளிகளை உம்
துருத்தியில் வைத்துள்ளீர்
உம்மாலே நான் மறக்கபடுவதில்லை
என் அலைச்சல்களை அறிந்து
வைத்துள்ளீர்
உம்மாலே நான் மறக்கபடுவதில்லை