உம்மாலே எல்லாம் கூடும்
Ummale Ellam Koodum
உம்மாலே எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
உங்க கிருபையே உங்க கிருபையே
என்னை தாங்கி நடத்தினதே
அலை மோதும் வாழ்வில் அசையாமல்
நிற்க நங்கூரமாக இருப்பவரே
காற்றையும் கடலையும் அதட்டி அமைதி
படுத்தினதும் உங்க கிருபையே
கரடு முரடான பாதைகளில்
வெளிச்சமாய் என்றும் இருப்பவரே
வழிகளில் எல்லாம் தூதர்கள் அனுப்பி
காப்பதும் உங்க கிருபையே