உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
Ummale Naan Oru Senaikul
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்
ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்
எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்
மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்
பெலத்தால் இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கி
வாழ வைத்தவரே
நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே
இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்
கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter