• waytochurch.com logo
Song # 15854

விண்ணப்பத்தைக் கேட்பவரே

Vinnapathai Ketpavare


விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்களை நடக்கச் செய்தீர்

உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com