• waytochurch.com logo
Song # 1590

அருள்நாதா நம்பிவந்தேன்



அருள்நாதா நம்பிவந்தேன்

1. அருள்நாதா நம்பிவந்தேன்,

நோக்கக்கடவீர்.

கைமாறின்றி என்னை முற்றும்

ரக்ஷிப்பீர்.




2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்

திருப் பாதத்தில்;

பாவ மன்னிப்பருள்வீர் இந்

நேரத்தில்.




3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்

உந்தன் ஆவியால்;

சுத்திசெய்வீர் மாசில்லாத

ரத்தத்தால்.




4. துணை வேண்டி நம்பி வந்தேன்,

பாதை காட்டுவீர்;

திருப்தி செய்து நித்தம் நன்மை

நல்குவீர்.




5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,

ஞானம் பெலனும்;

அக்னி நாவும் வல்ல வாக்கும்

ஈந்திடும்.




6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,

தவறாமலே

என்னை என்றும் தாங்கி நின்று

காருமே.





Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com