• waytochurch.com logo
Song # 1598

அருளின் ஒளியைக்





அருளின் ஒளியைக் கண்டார்

1. அருளின் ஒளியைக் கண்டார்

இருளின் மாந்தரே;

மருள் மரண மாந்தரில்

திரு ஒளி வீச.




2. ஜாதிகளைத் திரளாக்கி

நீதி மகிழ்ச்சியால்

கோதில் அறுப்பில் மகிழ

ஜோதியாய்த் தோன்றினார்.




3. கர்த்தன், பிறந்த பாலகன்,

கர்த்தத்துவமுள்ளோன்;

சுத்த அவரின் நாமமே

மெத்த அதிசயம்.




4. ஆலோசனையின் கர்த்தனே,

சாலவே வல்லோனே,

பூலோக சமாதானமே,

மேலோக தந்தையே.




5. தாவீதின் சிங்காசனத்தை

மேவி நிலைகொள்ள

கூவி நியாயம் நீதியால்

ஏவி பலம் செய்வார்.

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com