• waytochurch.com logo
Song # 1599

அல்லேலூயா



அல்லேலூயா! ஆ மாந்தரே

1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!

ஆ மாந்தரே, நாம் பாடுவோம்,

இந்நாளில் சாவை வென்றோராம்

விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்.

அல்லேலூயா!




2. அஞ்ஞாயிறு அதிகாலை

நல் மாதர் மூவர் கல்லறை

சென்றாரே காண தேகத்தை.




3. அம்மூவர் பார்த்தார் தூதன் தான்;

வெண் ஆடை தூதன் சொல்லுவான்:

நாதர் கலிலேயா செல்வார்.




4. பயந்த சீஷர் ராவிலே

கண்டார் கேட்டார் தம் நாதரே!

என் சமாதானம், தாசரே!




5. உயிர்த்த நாதர் கண்டோமே

என்றோரைத் தோமா கேட்டானே;

நம்பான், சந்தேகங்கொண்டானே.




6. வா, தோமா, என் விலாவைப் பார்,

இதோ, என் கைகள் கால்கள் பார்;

நம்பு, சந்தேகம் தீர் என்பார்.




7. தோமா சந்தேகம் தீர்ந்தனன்;

விலா, கை, கால்கள் நோக்கினன்;

என் நாதா! ஸ்வாமி! என்றனன்.




8. காணாமல் நம்பின் பாக்கியர்;

மாறா விஸ்வாசம் வைப்பவர்

மா நித்திய ஜீவன் பெறுவர்.




9. மா தூயதாம் இந்நாளில் நாம்

நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்;

பரனைப் போற்றி மகிழ்வோம்.

அல்லேலூயா!

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com