கொல்கதாவே கொலை மரமே
Kolkothavae Kolai Marame
கொல்கதாவே கொலை மரமே 
கோர மரணம் பாராய் மனமே x2
கோர மனிதர் கொலை செய்தார் 
{கோர காட்சி பார் மனமே} x2
கொல்கதாவே கொலை மரமே 
கோர மரணம் பாராய் மனமே
கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார் 
கள்ளர் நடுவில் கொலை மரத்தில் 
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன் 
{எந்தன் ஜீவ நாயகா} x2
கொல்கதாவே கொலை மரமே 
கோர மரணம் பாராய் மனமே
என்னை மீட்ட கொலை மரமே 
அன்னையே நான் என்ன செய்வேன் 
என்னை உமக்கே ஒப்புவித்தேன் 
{என்றென்றுமாய் நான் வாழ} x2
கொல்கதாவே கொலை மரமே 
கோர மரணம் பாராய் மனமே
வானம் பூமி ஒன்றாய் இணைத்த 
வல்ல தேவா உமக்கே சரணம் 
வாடி வாடி கொலை மரத்தில் 
{நிற்கும் காட்சி பார் மனமே} x2
கொல்கதாவே கொலை மரமே 
கோர மரணம் பாராய் மனமே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
{அல்லேலூயா என்றென்றும்} x2
கொல்கதாவே கொலை மரமே 
கோர மரணம் பாராய் மனமே 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter