aanantha geethangal – paadungal – vaalththungal
ஆனந்த கீதங்கள் – பாடுங்கள் – வாழ்த்துங்கள்
ஆண்டவர் பாலனாய் – மண்ணிலே தோன்றினார்
ஆதாம் செய் பாவங்கள் – சாபங்கள் – நீக்கவே
அன்னையின் மைந்தனாய் – தாழ்மையாய் – தோன்றினார்
– ஆனந்த கீதங்கள்
1. மேலோக தூதர்கள் பாட – பூலோக மாந்தர்கள் போற்ற
தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2)
வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள்
விண்ணில் நல்லாட்சி தோன்ற – மண்வீழ்ச்சி காண – வந்தார் (2)
– ஆனந்த கீதங்கள்
2. சர்ப்பத்தின் தலையை நசுக்க – சந்தோஷம் எங்கும் பெருக
சாந்த குமாரன் இயேசு – தோன்றினார் (2)
சாலேமின் ராஜனிவர் – மகிழ்ந்து கண் தூங்கிடவே
ஜீவனோர் தொட்டில் இல்லை – மாடடையும் கொட்டில் உண்டு (2)
– ஆனந்த கீதங்கள்