ஆனந்தமே ஜெயா ஜெயா
ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
பல்லவி
ஆனந்தமே ! ஜெயா ! ஜெயா !
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் 
அனுபல்லவி
ஞானரட்சகர் நாதர் நமை -இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் --- புகழ் 
சரணங்கள்
1. சங்கு கனம் , வளர் செங்கோலரசிவை 
தளராதுள கிறிஸ்தானவராம் , 
எங்கள் ரட்சகரேசு நமை -வெகு 
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் --- புகழ்
2. முந்து வருடமதனில் மனுடரில் வெகு 
மோசகஸ்திகள் தனிலேயுழல , 
தந்து நமக்குயிருடையுணவும் - வெகு 
தயவுடன் யேசு தற்காத்ததினால் --- புகழ்
3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகுகொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும் ,
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத் , 
தரைதனில் குறைதணித் தாற்றியதால் --- புகழ்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter