aananthamaaka anparaip paatuvaen இயேசுவைப்போல் யாருமில்லை
இயேசுவைப்போல் யாருமில்லை
1. ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென் ஆத்துமாவிற்கே
ஆனந்தமான ஆசீகளருளும்
ஆண்டவர் இயேசு போல் ஆருமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே
2. தந்தை தாயுமுன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார் – இயேசு
3. அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வானமழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
பெலத்தின்மேல் பெலம் அடைந்திடுவீர் – இயேசு
4. கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார் .. இயேசு
5. மகிமையும் நம்பிக்கை சந்தோஷமும்
மகிழ்ச்சியின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் .. இயேசு