aandavaa undran sevaikadiyen ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்
ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்
தூண்டும் உன் ஆவி அருள்வாய்
என்னைத் தியாகிக்க ஏவும்
உன் அனல் மூட்டிடுவாய்
இந்நிலம் தன்னில் மாளும்
மனுமக்கள் மீட்பிற்காக
பிசிக்கப் பண்டமில்லாமல்
பூவில் இல்லமுமே அன்றி
நசிந்து நலிந்து நாட்டில்
கசிந்து கண்ணீர் சொரிந்து
தேச மெல்லாம் தியங்கும்
நேச மக்கள் சேவைக்கே
நிமலா எனை ஏற்றுக்கொள்
வறுமை வங்கடன் வியாதி
குருட்டாட்ட்டம் கட்சி கடும்
அறிவீனம் அந்தகாரம்
மருள் மூடி மக்கள் வாடும்
தருணம் இக்காலமதால்
குருநாதா உனதன்பை
அருள்வாய் அடியேனுக்கே
அருமை ரட்சகா உன்றன்
அரும்பாடு கண்ணீர் தியாகம்
பேரன்பு பாரச் சிலுவை
சருவமும் கண்ட என்றன்
இருதயம் தைந்துருகி
வெறும் பேச்சாய் நின்றிடாமல்
தருணம் எனையே தந்தேன்
உலகே உனதாயினும்
தலை சாய்க்கத் தாவில்லாமல்
நலமே புரிந்து திரிந்தாய்
எல்லாம் துறந்து யான் உன்
நல்லாவி கொண்டுழைக்க
வல்லா உனின் சிலுவை
அல்லால் வழி வேறுண்டா