aaseervathiyum karththarae aanantha mikavae ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசிரோ வான ஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்
இம்மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கி தரிக்க
ஊக்கமருளுமே ( வீசிரோ )
ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் இயேசு ராஜனாய்
ஏற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே ( வீசிரோ )
பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்துதித்தும்மைப் பிரஸ்தாபிக்க
ஆ! தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் ( வீசிரோ )