• waytochurch.com logo
Song # 1637

ஆவியை அருளுமே





ஆவியை அருளுமே , சுவாமீ

பல்லவி

ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்

காயுர் கொடுத்த வானத்தினரசே




சரணங்கள்

1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?

நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?

முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?

முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? --- ஆவியை




2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,

பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,

தேவ சமாதானம் , நற்குணம் , தயவு,

திட விசுவாசம் சிறிதெனுமில்லை --- ஆவியை




3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;

திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,

பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,

பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் --- ஆவியை


Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com