aathiyil yethenil aadhamu ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை
ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை
அருளிச் செய்தீரே
அவ்விதமாகவே இவ்விரு பேரையும்
இணைத்தருள்வீரே
மங்களமாய் திருமறையைத் தொடங்கி
மங்களாமாய் முடித்தீர்
மங்கள மா மணவாளனாய்
மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர்
ஆபிரகாம் எலியேசர் தம்
மன்றாட்டுக் கருள் புரிந்தீரே
அங்ங்னமே இந்த மங்களம்
செழிக்க ஆசியருள்வீரே
கானாவூர் கலியாணம் கண்டு
களித்த எம் காத்தரே வந்திடுவீர்
காசினி மீதிவர் நேசமாய்
வாழ்ந்திட கிருபை செய்திடுவீர்
இன்பமும் துன்பமும் இம்மண
மக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவே
அன்பர் உம் பாதம் ஆதாரம்
என்றும்மை அணுகச் செய்திடுவீர்