aathiyum anthamumaanavarae ஆதியும் அந்தமும் அவரே
ஆதியும் அந்தமும் அவரே
1.ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமெகாவுமானவரே – 2
அல்லேலூயா – 4
2.இருக்கிறவராய் இருப்பவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
அல்லேலூயா – 4
3.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – 2
அல்லேலூயா – 4
4.பரிசுத்த பலியாய் வந்தவரே
எங்களுக்காய் பலியானவரே – 2
அல்லேலூயா – 4
5.சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோமே – 2
அல்லேலூயா – 4
6.சத்துரு வெள்ளம் போல் வரும்போது
ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2
அல்லேலூயா – 4
7.கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்
ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே – 2
அல்லேலூயா – 4
8.புறப்பட்டுப் போங்கள் என்றவரே
அதிகாரங்கள் யாவும் தந்தவரே – 2
அல்லேலூயா – 4
9.உலகின் முடிவு பரியந்தம் நான்
உங்களோடிருப்பேன் என்றவரே – 2
அல்லேலூயா – 4
10.ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே – 2
அல்லேலூயா – 4
11.அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா