aethukkalukiraay nee ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்
ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்
வாடையடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ
1. மூடத் துணியில்லையோ இந்த மாடயையுங் கொட்டிலிலே
வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ
2. தந்தைக்கு தச்சு வேலை உன் தாயும் எளியவளே
இந்த மாசங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு
3. இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க வந்த
செல்வமே நீயழுதால் ஏழை மாது நான் என்ன செய்வேன்
4. ஜோதியே சுந்தரமே மனு ஜாதியை மீட்க வந்த
நாதனே நீ அழுதால் இந்த நாடும் சிரியாதோ