• waytochurch.com logo
Song # 1651

சுந்தரப் பரம





சுந்தரப் பரம தேவ மைந்தன்

பல்லவி

சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத்

தோத்திரம், புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் !




அனுபல்லவி

அந்தரம் புவியும் தந்து , சொந்த ஜீவனையும் ஈந்து

ஆற்றினார், நமை ஒன்றாய் கூட்டினார், அருள் முடி

சூட்டினார், கிருபையால் தேற்றினாரே, துதி --- சுந்தர




சரணங்கள்

1. பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த

பாவிகளான நமை உசாவி மீட்டாரே;

வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த

மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே,

கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்

கூடுங்கள் - பவத்துயர்

போடுங்கள் - ஜெயத்தைக் கொண்

டாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள், பாடுங்கள் என்றும் --- சுந்தர




2. விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்

விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே ,

மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்

வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே,

அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண்

டாடிட - அவர் பதம்

தேடிட - வெகு திரள்

கூடிடத் துதிபுகழ் பாடிடப் பாடிட என்றும் --- சுந்தர




3. சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்

சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே,

எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்

ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே,

உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்,

உயர்ந்து - வாழ, தீயோன்

பயந்து - தாழ, மிக

நயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான், நயந்தான் என்றும் --- சுந்தர

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com