anbinil pirantha iragulam namae அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே – 2
ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் – 2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் – 2
பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம்
பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை – 2
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் – 2
பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும்