anbodu vanthom kanikkai thanthom அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே
உம் பலியோடு சேர்ப்பாய் தூயவனே -2
பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் -2
புதிரான வாழ்வே எதிரானதாலே -2
பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே
உம் அருளோடு அணைப்பாய் மாபரனே
அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம் -2
திரியாகக் கருகி மெழுகாக உருகி -2
பலியாக வைத்தோம் ஆண்டவனே
புது ஒளியாக மாற்றும் தூயவனே