anpin uruvam aantavar அழைக்கிறார் நீ ஓடிவா
அழைக்கிறார் நீ ஓடிவா
1.அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் நீ அருகில் வா
தொய்ந்துபோன உன் வாழ்வினை கேட்கிறார் நீஅருகில்வா
ஓடி வா நீ ஓடி வா கண்கலங்கியே நீயே வா
தூரமாய் நிற்கும் உன்னைத்தான் அழைக்கிறார் நீ அருகில்வா
2. மனிதர் பலரை நம்பினாய் பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம் கனவு போன்று அகலுமே
3.நண்பர் பலரும் இருப்பினும் நாடும் அன்பை பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாய்கையே உலகம் கானல் நீராமே
4.ஒருமுறை அன்பை ருசித்தும் விழுந்து போன நீ எழும்பிவா
பலமுறை துரோகம்செய்ததால்இயேசுவின்கண்ணீர்துடைக்கவா
5.இன்னும் நொந்து போவானேன் இன்றே அருகில் ஓடிவா
உள்ளம் குமுறும் உன்னையே தள்ளேன் என்றார் ஓடிவா