appa seitha nanmaigal அப்பா செய்த நன்மைகளை
அப்பா செய்த நன்மைகளை
நினைச்சு பார்க்கிறேன்
ஆர்வத்தோடு நன்றி சொல்லி
துதித்து மகிழ்கிறேன்
நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா
நான் செய்த பாவங்கள் மன்னித்தீரே
உம் மகனாய் என்னையும் ஏற்றுக் கொண்டீரே
வாதை என் கூடாரத்தை அணுகாது என்று
வாழ்நாளெல்லாம் காத்து வந்தீரையா
இல்லாததும் பொல்லாததும் சொல்லிய போது
மகிழ்ந்து களிகூர வைத்தீரையா
உச்சிதமான கோதுமையால் போஷித்தீரே
கன்மலையின் தேனினால் தாகம் தீர்த்தீரே
அறியாத புரியாத காரியங்களை
கூப்பிட்ட நேரங்களில் அறிவித்தீரையா
நோய்களாலே துவண்டு போன
அந்த நேரத்தில் – சுகம் தந்து
என்னையும் காத்தீரையா