appa unthan patham அப்பா உந்தன் பாதம்
அப்பா உந்தன் பாதம்
அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலே
உள்ளம் பொங்குதே – உந்தன்
பாவம் சாபம் போக்கி
நோய்களெல்லாம் நீக்கி
சுகமான வாழ்வைத் தந்தீரே – எனக்கு
அன்பின் ஆவியாலே
அபிஷேகித்து நிறைத்தீர்
அன்பரே உம்மைத் துதிப்பேன் – என்றும்
கிருபை வசனத்தாலே
மகிமை வாழ்வை தந்தீர்
ராஜாவே உம்மைப் புகழ்வேன் – இயேசு
கருணையுள்ள தேவா
அருளைப் பொழியும் நாதா
உமக்காக என்றும் வாழ்வேன் – இனி