• waytochurch.com logo
Song # 1659

தேவனே





தேவனே, நான் உமதண்டையில்

பல்லவி

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்

சேர்வதே என் ஆவல் பூமியில்.




அனுபல்லவி

மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான்

கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் --- தேவனே




சரணங்கள்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு

இராவில் இருள் வந்து மூடிட,

தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்

நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! --- தேவனே




2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்

பண்ணும் ஐயா, என்றன் தேவனே,

கிருபையாக நீர் எனக்குத்தருவதெல்லாம் உமதண்டை

அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் --- தேவனே




3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து

கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;

இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,

என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் --- தேவனே




4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்

ஆகாயத்தில் ஏறிப் போயினும்,

வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்

மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் --- தேவனே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com