arutkadave varanthara அருட்கடவே வரந்தர இது சமயமே
அருட்கடவே வரந்தர இது சமயமே
ஐயனே அருள் தாரும்
சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே
கரங்களில் தாசனைக் காத்திடும் தேவா
பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே
உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க
அன்போடு யேசுவை ஆவியோடு பேச
இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய
திரியேக தேவா திருச்சபை பெருக
அறிவுடனாளும் அன்பர் கோனாக
அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா
சந்ததம் வாழ சபைகளுஞ் செழிக்க.